திருப்பல்லாண்டு pdf
##ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன்
~~1~~ராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
~~2~~ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.
##குருபரம்பரை தனியன்
~~3~~லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
~~4~~அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.
##எம்பெருமானார் தனியன்
~~5~~யோ நித்யமச்யுதபதாம்ஜயுக்மருக்ம
~~6~~வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
~~7~~அஸ்மத்குரோர் பகவதோsஸ்ய தயைகஸிந்தோ:
~~8~~ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.
##நம்மாழ்வார் தனியன்
~~9~~மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-
~~10~~ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
~~11~~ஆத்யஸ்ய ந:குலபதேர் வகுளா பிராமம்
~~12~~ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.
##ஆழ்வார்கள் உடையவர் தனியன்
~~13~~பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
~~14~~ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
~~15~~பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
~~16~~ஸ்ரீமத் பராங்குஸ முநிம் பரணதோஸ்மி நித்யம்.
##பிரபந்த தனியன்கள்
###நாதமுனிகள் அருளிச் செய்தது
~~901~~குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
~~902~~நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
~~903~~ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
~~904~~த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
###பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
~~905~~மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
~~906~~சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள்
~~907~~கிழியறுத்தானென்றுரைத்தோம்,கீழ்மையினிற்சேரும்
~~908~~வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து
~~909~~பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று
~~910~~ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய
~~911~~வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
~~912~~பாதங்கள்யாமுடையபற்று.
##பாசுரங்கள்
~~17~~பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
~~18~~பலகோடி நூறாயிரம்
~~19~~மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
~~20~~செவ்வடி செவ்வி திருக்காப்பு (1)
~~21~~அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
~~22~~வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
~~23~~வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
~~24~~படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே (2)
~~25~~வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
~~26~~கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
~~27~~ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர்வாழ் இலங்கை
~~28~~பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே (3)
~~29~~ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
~~30~~கூடு மனமுடையீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக்கூடுமினோ
~~31~~நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாயவென்று
~~32~~பாடு மனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே (4)
~~33~~அண்டக்குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
~~34~~இண்டைக்குலத்தை எடுத்துக்களைந்த இருடீகே சன்தனக்கு
~~35~~தொண்டக் குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
~~36~~பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே (5)
~~37~~எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
~~38~~வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில்
~~39~~அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
~~40~~பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்று பாடுதமே (6)
~~41~~தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின்
~~42~~கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
~~43~~மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
~~44~~பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (7)
~~45~~நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
~~46~~கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
~~47~~மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல
~~48~~பையுடை நாகப் பகைக்கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே (8)
~~49~~உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
~~50~~தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
~~51~~விடுத்த திசைக்கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
~~52~~படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (9)
~~53~~எந்நாள் எம்பெருமான் உன்தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
~~54~~அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்ததுகாண்
~~55~~செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலைகுனித்து ஐந்தலைய
~~56~~பைந்நாகத்தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே (10)
~~57~~அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
~~58~~செல்வனைப்போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்
~~59~~நல்வகையால் நமோநாராயணா வென்று நாமம் பலபரவி
~~60~~பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே (11)
~~61~~பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
~~62~~வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல்
~~63~~நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
~~64~~பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே(12)