திருப்பல்லாண்டு pdf

##ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன் ~~1~~ராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம் ~~2~~ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம். ##குருபரம்பரை தனியன் ~~3~~லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம் ~~4~~அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம். ##எம்பெருமானார் தனியன் ~~5~~யோ நித்யமச்யுதபதாம்ஜயுக்மருக்ம ~~6~~வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே ~~7~~அஸ்மத்குரோர் பகவதோsஸ்ய தயைகஸிந்தோ: ~~8~~ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே. ##நம்மாழ்வார் தனியன் ~~9~~மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்- ~~10~~ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் ~~11~~ஆத்யஸ்ய ந:குலபதேர் வகுளா பிராமம் ~~12~~ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா. ##ஆழ்வார்கள் உடையவர் தனியன் ~~13~~பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத- ~~14~~ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந் ~~15~~பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந் ~~16~~ஸ்ரீமத் பராங்குஸ முநிம் பரணதோஸ்மி நித்யம். ##பிரபந்த தனியன்கள் ###நாதமுனிகள் அருளிச் செய்தது ~~901~~குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான் ~~902~~நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக ~~903~~ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத் ~~904~~த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ###பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை ~~905~~மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால் ~~906~~சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள் ~~907~~கிழியறுத்தானென்றுரைத்தோம்,கீழ்மையினிற்சேரும் ~~908~~வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து ~~909~~பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று ~~910~~ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய ~~911~~வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான் ~~912~~பாதங்கள்யாமுடையபற்று. ##பாசுரங்கள் ~~17~~பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு ~~18~~பலகோடி நூறாயிரம் ~~19~~மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் ~~20~~செவ்வடி செவ்வி திருக்காப்பு (1) ~~21~~அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு ~~22~~வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு ~~23~~வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு ~~24~~படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே (2) ~~25~~வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் ~~26~~கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் ~~27~~ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர்வாழ் இலங்கை ~~28~~பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே (3) ~~29~~ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து ~~30~~கூடு மனமுடையீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக்கூடுமினோ ~~31~~நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாயவென்று ~~32~~பாடு மனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே (4) ~~33~~அண்டக்குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை ~~34~~இண்டைக்குலத்தை எடுத்துக்களைந்த இருடீகே சன்தனக்கு ~~35~~தொண்டக் குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி ~~36~~பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே (5) ~~37~~எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி ~~38~~வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில் ~~39~~அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை ~~40~~பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்று பாடுதமே (6) ~~41~~தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின் ~~42~~கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் ~~43~~மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி ~~44~~பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (7) ~~45~~நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் ~~46~~கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் ~~47~~மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல ~~48~~பையுடை நாகப் பகைக்கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே (8) ~~49~~உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு ~~50~~தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் ~~51~~விடுத்த திசைக்கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில் ~~52~~படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (9) ~~53~~எந்நாள் எம்பெருமான் உன்தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட ~~54~~அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்ததுகாண் ~~55~~செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலைகுனித்து ஐந்தலைய ~~56~~பைந்நாகத்தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே (10) ~~57~~அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன் ~~58~~செல்வனைப்போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன் ~~59~~நல்வகையால் நமோநாராயணா வென்று நாமம் பலபரவி ~~60~~பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே (11) ~~61~~பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும் ~~62~~வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல் ~~63~~நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று ~~64~~பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே(12)