கந்த சஷ்டி கவசம் pdf

~~1~~துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் ~~2~~பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் ~~3~~நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் ~~4~~கந்தர் சஷ்டி கவசம் தனை. ~~6~~அமரரிடர் தீர அமரம் புரிந்த ~~7~~குமரனடி நெஞ்சே குறி… ~~9~~சஷ்டியை நோக்கச் சரவண பவனார் ~~10~~சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் ~~11~~பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை ~~12~~கீதம் பாடக் கிண்கிணி யாட ~~15~~மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் ~~16~~கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து ~~17~~வரவர வேலா யுதனார் வருக ~~18~~வருக வருக மயிலோன் வருக ~~20~~இந்திரன் முதலா எண்டிசை போற்ற ~~21~~மந்திர வடிவேல் வருக வருக! ~~22~~வாசவன் மருகா வருக வருக ~~23~~நேசக் குறமகள் நினைவோன் வருக ~~25~~ஆறுமுகம் படைத்த ஐயா வருக ~~26~~நீறிடும் வேலவன் நித்தம் வருக ~~27~~சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! ~~28~~சரவண பவனார் சடுதியில் வருக ~~30~~ரவண பவச ர ர ர ர ர ர ர ~~31~~ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி ~~32~~விநபவ சரவண வீரா நமோநம ~~33~~நிபவ சரவண நிறநிற நிறென ~~35~~வசுர வணப வருக வருக ~~36~~அசுரர் குடிகெடுத்த ஐயா வருக ~~37~~என்னை ஆளும் இளையோன் கையில் ~~38~~பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் ~~41~~பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க ~~42~~விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ~~43~~ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் ~~44~~உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும் ~~46~~கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் ~~47~~நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் ~~48~~சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் ~~49~~குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக! ~~51~~ஆறு முகமும் அணிமுடி ஆறும் ~~52~~நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் ~~53~~பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் ~~54~~நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ~~56~~ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ~~57~~ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் ~~58~~பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து ~~59~~நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் ~~61~~முப்புரி நூலும் முத்தணி மார்பும் ~~62~~செப்பழ குடைய திருவயி றுந்தியும் ~~63~~துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் ~~64~~நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் ~~68~~இருதொடை யழகும் இணைமுழந் தாளும் ~~69~~திருவடி யதனில் சிலம்பொலி முழங்க ~~70~~செககண செககண செககண செகண ~~71~~மொகமொக மொகமொக மொகமொக மொகென ~~73~~நகநக நகநக நகநக நகென ~~74~~டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ~~75~~ரரரர ரரரர ரரரர ரரர ~~76~~ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி ~~78~~டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு ~~79~~டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு ~~80~~விந்து விந்து மயிலோன் விந்து ~~81~~முந்து முந்து முருகவேள் முந்து ~~83~~என்றனை யாளும் ஏரகச் செல்வ ~~84~~மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் ~~85~~லாலா லாலா லாலா வேசமும் ~~86~~லீலா லீலா லீலா வினோ தனென்று ~~88~~உன் திருவடியை உறுதியென் றெண்ணும் ~~89~~எந்தலை வைத்துன் இணையடி காக்க ~~90~~என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க ~~91~~பன்னிரு விழியால் பாலனைக் காக்க ~~95~~அடியேன் வதனம் அழகுவேல் காக்க ~~96~~பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க ~~97~~கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க ~~98~~விதிசெவி இரண்டும் வேலவர் காக்க ~~100~~நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க ~~101~~பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க ~~102~~முப்பத் திருபல் முனைவேல் காக்க ~~103~~செப்பிய நாவைச் செவ்வேல் காக்க ~~105~~கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க ~~106~~என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க ~~107~~மார்பை ரத்ன வடிவேல் காக்க ~~108~~சேரிள முலைமார் திருவேல் காக்க ~~110~~வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க ~~111~~பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க ~~112~~அழகுடன் முதுகை அருள்வேல் காக்க ~~113~~பழுபதி னாறும் பருவேல் காக்க ~~115~~வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க ~~116~~சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க ~~117~~நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ~~118~~ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க ~~121~~பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க ~~122~~வட்டக் குதத்தை வல்வேல் காக்க ~~123~~பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க ~~125~~கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ~~126~~ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க ~~127~~கைகளி ரண்டும் கருணைவேல் காக்க ~~129~~முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க ~~130~~பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க ~~131~~நாவில் சரஸ்வதி நற்றுணை யாக ~~132~~நாபிக் கமலம் நல்வேல் காக்க ~~133~~முப்பால் நாடியை முனைவேல் காக்க ~~135~~எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க ~~136~~அடியேன் வதனம் அசைவுள நேரம் ~~137~~கடுகவே வந்து கனகவேல் காக்க ~~138~~வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க ~~139~~அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ~~141~~ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க ~~142~~தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க ~~143~~காக்க காக்க கனகவேல் காக்க ~~144~~நோக்க நோக்க நொடியில் நோக்க ~~147~~தாக்க தாக்க தடையறக் தாக்க ~~148~~பார்க்க பார்க்க பாவம் பொடிபட ~~149~~பில்லி சூனியம் பெரும்பகை அகல ~~150~~வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் ~~151~~அல்லற் படுத்தும் அடங்கா முனியும் ~~152~~பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் ~~154~~கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் ~~155~~பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் ~~156~~அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட ~~157~~இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும் ~~158~~எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் ~~160~~கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் ~~161~~விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் ~~162~~தண்டியக் காரரும் சண்டாளர்களும் ~~163~~என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ~~165~~ஆனை யடியினில் அரும்பாவைகளும் ~~166~~பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் ~~167~~நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் ~~168~~பாவைகளுடனே பலகல சத்துடன் ~~170~~மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ~~171~~ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும் ~~172~~காசும் பணமும் காவுடன் சோறும் ~~173~~ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் ~~176~~அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட ~~177~~மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட ~~178~~காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட ~~179~~அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட ~~181~~வாய்விட்டலறி மதிகெட்டோட ~~182~~படியினில் முட்ட பாசக் கயிற்றால் ~~183~~கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு ~~184~~கட்டி உருட்டு கைகால் முறிய ~~186~~கட்டு கட்டு கதறிடக் கட்டு ~~187~~முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட ~~188~~செக்கு செக்கு செதில் செதிலாக ~~189~~சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு… ~~191~~குத்து குத்து கூர்வடி வேலால் ~~192~~பற்று பற்று பகலவன் தணலெரி ~~193~~தணலெரி தணலெரி தணலது வாக ~~194~~விடு விடு வேலை வெகுண்டது வோடப் ~~196~~புலியும் நரியும் புன்னரி நாயும் ~~197~~எலியும் கரடியும் எனை தொடர்ந்தோட ~~198~~தேளும் பாம்பும் செய்யான் பூரான் ~~199~~கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ~~202~~ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ~~203~~ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் ~~204~~வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் ~~205~~குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு ~~207~~குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி ~~208~~பக்கப் பிளவை படர்தொடை வாழை ~~209~~கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி ~~210~~பற்குத் தரணை பருஅரை யாப்பும் ~~212~~எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் ~~213~~நில்லா தோட நீ எனக் கருள்வாய் ~~214~~ஈரேழு உலகமும் எனக் குறவாக ~~215~~ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா ~~217~~மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் ~~218~~உன்னைத் துதிக்க உன் திரு நாமம் ~~219~~சரவண பவனே சைலொளி பவனே ~~220~~திரிபுர பவனே திகழொளி பவனே ~~222~~பரிபுர பவனே பவமொளி பவனே ~~223~~அரிதிரு மருகா அமரா பதியைக் ~~224~~காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் ~~225~~கந்தா குகனே கதிர்வே லவனே ~~228~~கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை ~~229~~இடும்பனை யழித்த இனியவேல் முருகா ~~230~~தனிகா சலனே சங்கரன் புதல்வா ~~231~~கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா ~~233~~பழநிப் பதிவாழ் பாலகுமாரா ~~234~~ஆவினன் குடிவாழ் அழகிய வேலா ~~235~~செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா ~~236~~சமரா புரிவாழ் சண்முகத் தரசே ~~238~~காரார் குழலாள் கலைமகள் நன்றாய் ~~239~~என்நா திருக்க யானுனைப் பாட ~~240~~எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் ~~241~~பாடினேன் ஆடினேன் பரவச மாக ~~243~~ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை ~~244~~நேச முடன்யான் நெற்றியில் அணிய ~~245~~பாச வினைகள் பற்றது நீங்கி ~~246~~உன்பதம் பெறவே உன்னரு ளாக ~~248~~அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் ~~249~~மெத்தமெத்தாக வேலா யுதனார் ~~250~~சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க ~~251~~வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க ~~254~~வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க ~~255~~வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க ~~256~~வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் ~~257~~வாழ்க வாழ்க வாரணத் துவசம் ~~259~~வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க ~~260~~எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் ~~261~~எத்தனை அடியேன் எத்தனை செய்தால் ~~262~~பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன் ~~264~~பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே ~~265~~பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து ~~266~~மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் ~~267~~தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் ~~269~~கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய ~~270~~பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் ~~271~~காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ~~272~~ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி ~~274~~நேசமுடன் ஒரு நினைவது வாகிக் ~~275~~கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் ~~276~~சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ~~277~~ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ~~278~~ஓதியே செபித்து உகந்துநீ றணிய ~~281~~அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த் ~~282~~திசைமன்ன ரெண்மர் செயல்து அருளுவர் ~~284~~மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர் ~~286~~நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் ~~287~~நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் ~~288~~எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார் ~~289~~கந்தர்கை வேலாம் கவசத் தடியை ~~291~~வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் ~~292~~விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் ~~293~~பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் ~~294~~நல்லோர் நினைவில் நடனம் புரியும் ~~296~~சர்வ சத்ரு சங்கா ரத்தடி ~~297~~அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில் ~~298~~வீரலட்சுமிக்கு விருந்துணவாகச் ~~299~~சூரபத்மாவைத் துணித்தகை யதனால் ~~300~~இருபத் தேழ்வர்க்கு வந்தமு தளித்த ~~303~~குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் ~~304~~சின்னக் குழந்தை சேவடி போற்றி! ~~305~~எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் ~~307~~மேவிய வடிவுறும் வேலவா போற்றி! ~~308~~தேவர்கள் சேனா பதியே போற்றி! ~~309~~குறமகள் மனமகிழ் கோவே போற்றி! ~~310~~திறமிகு திவ்விய தேகா போற்றி! ~~311~~இடும்பா யுதனே இடும்பா போற்றி! ~~313~~கடம்பா போற்றி கந்தா போற்றி! ~~314~~வெற்றி புனையும் வேலே போற்றி! ~~315~~உயர்கிரி கனக சபைக்கோ ரரசே! ~~316~~மயில்நட மிடுவோய் மலரடி சரணம்! ~~318~~சரணம் சரணம் சரவண பவ ஓம் ~~319~~சரணம் சரணம் சண்முகா சரணம்!