கந்த சஷ்டி கவசம் pdf
~~1~~துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
~~2~~பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
~~3~~நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
~~4~~கந்தர் சஷ்டி கவசம் தனை.
~~6~~அமரரிடர் தீர அமரம் புரிந்த
~~7~~குமரனடி நெஞ்சே குறி…
~~9~~சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
~~10~~சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
~~11~~பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
~~12~~கீதம் பாடக் கிண்கிணி யாட
~~15~~மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
~~16~~கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து
~~17~~வரவர வேலா யுதனார் வருக
~~18~~வருக வருக மயிலோன் வருக
~~20~~இந்திரன் முதலா எண்டிசை போற்ற
~~21~~மந்திர வடிவேல் வருக வருக!
~~22~~வாசவன் மருகா வருக வருக
~~23~~நேசக் குறமகள் நினைவோன் வருக
~~25~~ஆறுமுகம் படைத்த ஐயா வருக
~~26~~நீறிடும் வேலவன் நித்தம் வருக
~~27~~சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
~~28~~சரவண பவனார் சடுதியில் வருக
~~30~~ரவண பவச ர ர ர ர ர ர ர
~~31~~ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
~~32~~விநபவ சரவண வீரா நமோநம
~~33~~நிபவ சரவண நிறநிற நிறென
~~35~~வசுர வணப வருக வருக
~~36~~அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
~~37~~என்னை ஆளும் இளையோன் கையில்
~~38~~பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
~~41~~பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
~~42~~விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
~~43~~ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
~~44~~உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
~~46~~கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
~~47~~நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
~~48~~சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
~~49~~குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
~~51~~ஆறு முகமும் அணிமுடி ஆறும்
~~52~~நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
~~53~~பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
~~54~~நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
~~56~~ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
~~57~~ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
~~58~~பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
~~59~~நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
~~61~~முப்புரி நூலும் முத்தணி மார்பும்
~~62~~செப்பழ குடைய திருவயி றுந்தியும்
~~63~~துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
~~64~~நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
~~68~~இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
~~69~~திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
~~70~~செககண செககண செககண செகண
~~71~~மொகமொக மொகமொக மொகமொக மொகென
~~73~~நகநக நகநக நகநக நகென
~~74~~டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
~~75~~ரரரர ரரரர ரரரர ரரர
~~76~~ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
~~78~~டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
~~79~~டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
~~80~~விந்து விந்து மயிலோன் விந்து
~~81~~முந்து முந்து முருகவேள் முந்து
~~83~~என்றனை யாளும் ஏரகச் செல்வ
~~84~~மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
~~85~~லாலா லாலா லாலா வேசமும்
~~86~~லீலா லீலா லீலா வினோ தனென்று
~~88~~உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
~~89~~எந்தலை வைத்துன் இணையடி காக்க
~~90~~என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
~~91~~பன்னிரு விழியால் பாலனைக் காக்க
~~95~~அடியேன் வதனம் அழகுவேல் காக்க
~~96~~பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
~~97~~கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
~~98~~விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
~~100~~நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
~~101~~பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
~~102~~முப்பத் திருபல் முனைவேல் காக்க
~~103~~செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
~~105~~கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
~~106~~என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
~~107~~மார்பை ரத்ன வடிவேல் காக்க
~~108~~சேரிள முலைமார் திருவேல் காக்க
~~110~~வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
~~111~~பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
~~112~~அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
~~113~~பழுபதி னாறும் பருவேல் காக்க
~~115~~வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
~~116~~சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
~~117~~நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
~~118~~ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
~~121~~பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
~~122~~வட்டக் குதத்தை வல்வேல் காக்க
~~123~~பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
~~125~~கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
~~126~~ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
~~127~~கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
~~129~~முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
~~130~~பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
~~131~~நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
~~132~~நாபிக் கமலம் நல்வேல் காக்க
~~133~~முப்பால் நாடியை முனைவேல் காக்க
~~135~~எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
~~136~~அடியேன் வதனம் அசைவுள நேரம்
~~137~~கடுகவே வந்து கனகவேல் காக்க
~~138~~வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
~~139~~அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
~~141~~ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
~~142~~தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
~~143~~காக்க காக்க கனகவேல் காக்க
~~144~~நோக்க நோக்க நொடியில் நோக்க
~~147~~தாக்க தாக்க தடையறக் தாக்க
~~148~~பார்க்க பார்க்க பாவம் பொடிபட
~~149~~பில்லி சூனியம் பெரும்பகை அகல
~~150~~வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
~~151~~அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
~~152~~பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
~~154~~கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
~~155~~பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
~~156~~அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
~~157~~இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
~~158~~எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
~~160~~கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
~~161~~விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
~~162~~தண்டியக் காரரும் சண்டாளர்களும்
~~163~~என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
~~165~~ஆனை யடியினில் அரும்பாவைகளும்
~~166~~பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
~~167~~நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
~~168~~பாவைகளுடனே பலகல சத்துடன்
~~170~~மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
~~171~~ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
~~172~~காசும் பணமும் காவுடன் சோறும்
~~173~~ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
~~176~~அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
~~177~~மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
~~178~~காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
~~179~~அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
~~181~~வாய்விட்டலறி மதிகெட்டோட
~~182~~படியினில் முட்ட பாசக் கயிற்றால்
~~183~~கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
~~184~~கட்டி உருட்டு கைகால் முறிய
~~186~~கட்டு கட்டு கதறிடக் கட்டு
~~187~~முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
~~188~~செக்கு செக்கு செதில் செதிலாக
~~189~~சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு…
~~191~~குத்து குத்து கூர்வடி வேலால்
~~192~~பற்று பற்று பகலவன் தணலெரி
~~193~~தணலெரி தணலெரி தணலது வாக
~~194~~விடு விடு வேலை வெகுண்டது வோடப்
~~196~~புலியும் நரியும் புன்னரி நாயும்
~~197~~எலியும் கரடியும் எனை தொடர்ந்தோட
~~198~~தேளும் பாம்பும் செய்யான் பூரான்
~~199~~கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
~~202~~ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
~~203~~ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
~~204~~வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
~~205~~குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
~~207~~குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
~~208~~பக்கப் பிளவை படர்தொடை வாழை
~~209~~கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
~~210~~பற்குத் தரணை பருஅரை யாப்பும்
~~212~~எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
~~213~~நில்லா தோட நீ எனக் கருள்வாய்
~~214~~ஈரேழு உலகமும் எனக் குறவாக
~~215~~ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
~~217~~மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
~~218~~உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
~~219~~சரவண பவனே சைலொளி பவனே
~~220~~திரிபுர பவனே திகழொளி பவனே
~~222~~பரிபுர பவனே பவமொளி பவனே
~~223~~அரிதிரு மருகா அமரா பதியைக்
~~224~~காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
~~225~~கந்தா குகனே கதிர்வே லவனே
~~228~~கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
~~229~~இடும்பனை யழித்த இனியவேல் முருகா
~~230~~தனிகா சலனே சங்கரன் புதல்வா
~~231~~கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
~~233~~பழநிப் பதிவாழ் பாலகுமாரா
~~234~~ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
~~235~~செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
~~236~~சமரா புரிவாழ் சண்முகத் தரசே
~~238~~காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
~~239~~என்நா திருக்க யானுனைப் பாட
~~240~~எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
~~241~~பாடினேன் ஆடினேன் பரவச மாக
~~243~~ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
~~244~~நேச முடன்யான் நெற்றியில் அணிய
~~245~~பாச வினைகள் பற்றது நீங்கி
~~246~~உன்பதம் பெறவே உன்னரு ளாக
~~248~~அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
~~249~~மெத்தமெத்தாக வேலா யுதனார்
~~250~~சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
~~251~~வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
~~254~~வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
~~255~~வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
~~256~~வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
~~257~~வாழ்க வாழ்க வாரணத் துவசம்
~~259~~வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
~~260~~எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
~~261~~எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
~~262~~பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்
~~264~~பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
~~265~~பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
~~266~~மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
~~267~~தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
~~269~~கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
~~270~~பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
~~271~~காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
~~272~~ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
~~274~~நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
~~275~~கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
~~276~~சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
~~277~~ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
~~278~~ஓதியே செபித்து உகந்துநீ றணிய
~~281~~அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
~~282~~திசைமன்ன ரெண்மர் செயல்து அருளுவர்
~~284~~மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
~~286~~நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
~~287~~நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
~~288~~எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
~~289~~கந்தர்கை வேலாம் கவசத் தடியை
~~291~~வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
~~292~~விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
~~293~~பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
~~294~~நல்லோர் நினைவில் நடனம் புரியும்
~~296~~சர்வ சத்ரு சங்கா ரத்தடி
~~297~~அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
~~298~~வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்
~~299~~சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
~~300~~இருபத் தேழ்வர்க்கு வந்தமு தளித்த
~~303~~குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
~~304~~சின்னக் குழந்தை சேவடி போற்றி!
~~305~~எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
~~307~~மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
~~308~~தேவர்கள் சேனா பதியே போற்றி!
~~309~~குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
~~310~~திறமிகு திவ்விய தேகா போற்றி!
~~311~~இடும்பா யுதனே இடும்பா போற்றி!
~~313~~கடம்பா போற்றி கந்தா போற்றி!
~~314~~வெற்றி புனையும் வேலே போற்றி!
~~315~~உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
~~316~~மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!
~~318~~சரணம் சரணம் சரவண பவ ஓம்
~~319~~சரணம் சரணம் சண்முகா சரணம்!